உள்ளூர் செய்திகள் (District)

விஷம் குடித்த 2 குழந்தைகளின் தாய் சாவு

Published On 2023-04-11 07:29 GMT   |   Update On 2023-04-11 07:29 GMT
  • ரேவதி (வயது 21). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
  • கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமு டைந்த ரேவதி, கடந்த மாதம் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

நாமக்கல்:

நாமக்கல் சின்னம்மா ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது மனைவி ரேவதி (வயது 21). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமு டைந்த ரேவதி, கடந்த மாதம் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த உறவி னர்கள், அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கா மல் நேற்று இரவு ரேவதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News