உள்ளூர் செய்திகள்

புனித அருவியின் அன்னை ஆலய திருவிழா தேர் பவனி

Published On 2023-05-15 09:12 GMT   |   Update On 2023-05-15 09:12 GMT
  • விழாவின் முக்கிய நிகழ்வாக ஒகேனக்கல் லூகாஷ் தேரை ெதாடங்கி வைத்தார்.
  • பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வீதிகளில் வலம் வந்ததை ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் ஊட்டமலை மக்கள் வழிபட்டனர்.

ஒகேனக்கல்,

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் கிறிஸ்தவ தேவாலயம் புனித அருவியின் அன்னை ஆலயம் உள்ளது.

இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தை லூர்துசாமி தலைமையில் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்த நிலையில் நேற்று காலை ஆடம்பர திருவிழா திருப்பலி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஒகேனக்கல் லூகாஷ் தேரை ெதாடங்கி வைத்தார். தேர் பவனியின்போது அருவியின் அன்னை தேர்பவனி ஊட்டமலை கோவிலில் இருந்து, ராணிப்பேட்டை வழியாக சாலையில் வலம் வந்தன.

இதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித அருவியின் அன்னை எழுந்தருளினார். பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வீதிகளில் வலம் வந்ததை ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் ஊட்டமலை மக்கள் வழிபட்டனர். வான வேடிக்கையுடன் நடைபெற்ற இந்த தேர் பவணியில் மெழுகுவர்த்தி ஏந்தி வேண்டுதலுக்காக திருத்தேர் மீது உப்பு தூவினர்.

Tags:    

Similar News