உள்ளூர் செய்திகள் (District)

கார் மீது லாரி மோதி தாய்-மகன் படுகாயம்

Published On 2022-12-28 09:44 GMT   |   Update On 2022-12-28 09:44 GMT
  • அவ்வழியாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது.
  • பத்மா, வினித் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பத்மா (வயது 35).இவர்களது மகன் வினித் (10).

3 பேரும் காரில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். சாமிபள்ளம் என்ற இடத்தருகே அவர்கள் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது.

இதில் பத்மா, வினித் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து ராஜேஷ்சூளகிரி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News