உள்ளூர் செய்திகள் (District)
கடும் பனிபொழிவால் வாகன ஒட்டிகள் அவதி
- கடுமையான மூடுபனி மற்றும் குளிர் நிலவியது.
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய வைத்தபடி சென்றனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான மூடுபனி மற்றும் குளிர் நிலவியது.பெங்க ளூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமை யான மூடுபனியால் முன்னால் செல்லும் ஆட்கள் தெரியாத தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய வைத்தபடி சென்றனர்.
அதிகாலை நேரத்தில் தொடங்கிய பனிமுட்டம் காலை 8 மணியை கடந்தும் குறையவில்லை. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது.
இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். மேலும் கார்த்திகை மாதத்தில் தொடங்கிய முதல் பனிப்பொழிவு அதிக அளவிலான பனிப்பொழிவுவாக நிலவியது. தற்பொழுது நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதி சீதோசன நிலையானது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளதை போல உள்ளது.