உள்ளூர் செய்திகள் (District)

ஏற்காடு சித்ரா எம்.எல்.ஏ புதிய மின்மாற்றி பயன்பாட்டை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

ஏற்காட்டில் புதிய மின்மாற்றிகள் அமைப்பு

Published On 2022-12-27 09:22 GMT   |   Update On 2022-12-27 09:22 GMT
  • ஏற்காடு பகுதி பொதுமக்கள், மின்மாற்றி அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • ஏற்காடு எம்.ஜி.ஆர் நகர் மற்றும் முண்டகம்பாடி பகுதிகளில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதி பொதுமக்கள், மின்மாற்றி அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஏற்காடு எம்.ஜி.ஆர் நகர் மற்றும் முண்டகம்பாடி பகுதிகளில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றி பயன்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் ஏற்காடு சித்ரா எம்.எல்.ஏ மற்றும் ஏற்காடு டவுன் பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி ரவிச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மின்சார வாரிய அதிகாரிகள், அ.தி.மு.க மாணவர் அணி ஒன்றிய செயலாளர் புகழேந்தி, ஏற்காடு டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாலு, ஜெரினாக்காடு கிளைச் செயலாளர் அசோக், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், கிளை பிரதிநிதி குணசேகரன், ஒண்டிக்கடை கிளை செய லாளர் முருகேசன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் மனோ கரன், சந்தோஷ், பிலிப்பான், மாயவன், தினேஷ்குமார், உதயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News