உள்ளூர் செய்திகள்

கைலாசநாதர் கோவிலில் வழிபாடு நடத்திய ஓ.பன்னீர்செல்வம்.

பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு

Published On 2022-11-06 05:08 GMT   |   Update On 2022-11-06 05:08 GMT
  • பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக்கோயிலில் மகா சனி பிரதோஷம் நடைபெற்றது.
  • முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கைலாசநாதர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பெரியகுளம்:

தேனிமாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக்கோயிலில் மகா சனி பிரதோஷம் நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்கும் 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கைலாசநாதர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. மேலும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு தேனி மாவட்ட ஆவின் மண்டல தலைவர் ஓ.ராஜா பிரசாதம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர்ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் நாளை கைலாசநாதர் மலைக்கோயிலில் 'கைலாசநாதருக்கு அன்னாபிஷேகமும் பவுர்ணமி கிரிவலமும் சிறப்பு அன்னதானமும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News