உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு

Published On 2023-01-07 10:29 GMT   |   Update On 2023-01-07 10:29 GMT
  • திருமுல்லைவாசல் ஊராட்சியிலும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
  • கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஆய்வு.

சீர்காழி:

சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, நெற்களம் அமைக்கும் பணி, பள்ளிகளில் கழிவறை கட்டிடம் கட்டும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்–தினார். தொடர்ந்து திருமுல்லைவாசல் ஊராட்சியிலும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

அதே போல் கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணியையும், 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் ஸ்ரீலேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன் ஓவர்சியர் அமலா ராணி, ஆரப்பள்ளம் ஊராட்சி தலைவர் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News