உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே முதியவர் தற்கொலை
- கோவிந்தசாமி அப்பகுதியில் உள்ள மரத்தில் திடீரென துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- முதியவர் தற்கொலை குறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது60). இவர் கடம்பத்துார் ஒன்றி யம் தொடுகாடு ஊராட்சியில் உள்ள பஞ்சமி தாங்கல் பகுதியில் உள்ள ஏரியில் ஏலம் எடுத்து மீன்பிடித்து வந்தார்.
இந்தநிலையில் கோவிந்தசாமி அப்பகுதியில் உள்ள மரத்தில் திடீரென துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.