உள்ளூர் செய்திகள் (District)
காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு
- காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
திருச்சி,
சென்னை தங்க நல்லூர் உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 67). திருச்சி வந்த இவர் அம்மா மண்டபத்தில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார். தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் மூழ்கி பலியான சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.