உள்ளூர் செய்திகள்

மொபட்டில் சென்ற முதியவர் சாவு

Published On 2023-02-22 09:33 GMT   |   Update On 2023-02-22 09:33 GMT
  • மோட்டார் சைக்கிள் அவர் மீதுமொதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
  • சேலம் மருத்துவமனை யில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள கொட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 62). கூலி தொழிலாளி.

இவர் தனது மொபட்டில் கடத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சம்பவத்தன்று சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீதுமொதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த ராஜாமணியை கடத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாமணி மீதுமோதிய இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News