உள்ளூர் செய்திகள்

தமிழ் புத்தாண்டையொட்டிதருமபுரி கோட்டை பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

Published On 2023-04-11 09:37 GMT   |   Update On 2023-04-11 09:37 GMT
  • ஜெபதவக்கோளத்தில் ரிஷி வந்தர் கா சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
  • அனைத்து காரியங்களும் வெற்றி பெற சிறப்பு மகா சங்கல்பம் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு நலம் பெற தருமபுரி அறநிலையத்துறையின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தருமபுரி,

தருமபுரி நகர பகுதியில் கோட்டை வர மகாலட்சுமி பரவாசுதேவர் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயர் சாமிக்கு தமிழ் வருட பிறப்பை ஒட்டி 14-ந்தேதி அன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு அர்ச்சகர் வெங்கட கிருஷ்ண பட்டாச்சாரியார் நடத்தும் நன்மை தரும் ராம நாமம் ஜெபதவக்கோளத்தில் ரிஷி வந்தர் கா சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து நவகிரகங்கள் தோஷம் நீங்கவும், கல்வியில் சிறந்து தேர்வில் வெற்றி பெறவும், சகல விதமான தடைகளும் நீங்கவும், நீண்ட ஆயுள் ஆரோக்கியம் மேம்படவும், நாம் செய்யும் வியாபாரத்தில் அதிக லாபம் பெறவும், கார்ய வெற்றி போன்ற பதினாறு செல்வங்களும் கிடைக்க ஆஞ்சநேயரின் 1008 நாமங்களை வாழ்வில் வசந்தம் தரும் வாசனை புஷ்பங்களைக் கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற உள்ளது.

அது சமயம் பக்த கோடிகள் சகஸ்ரநாம அர்ச்சனையில் கலந்து கொண்டு பிறக்க இருக்கும் இந்த தமிழ் வருட முதல் நாளில் செய்யவிருக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற சிறப்பு மகா சங்கல்பம் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு நலம் பெற தருமபுரி அறநிலையத்துறையின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News