தூத்துக்குடி உப்பளத் தொழிலாளி கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது
- அலெக்சை மது குடிக்க அழைத்து அதிக அளவு மதுகுடிக்க வைத்து வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.
- இந்த கொலையில் தூத்துக்குடி கக்கன்ஜி நகரை சேர்ந்த இசக்கிமணி என்பவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்த முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற சில்லி (வயது 28). உப்பள தொழிலாளி.
இவரை கடந்த 31-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது நண்பர் ஆறுமுகச்சாமி ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் மகேஷ், ஆறுமுகச்சாமியை கைது செய்தனர். விசாரணையில் மகேசின் சகோதரரான ரமேஷ் என்பவரை கடந்த ஆண்டு அலெக்ஸ் கத்தியால் குத்தியதாகவும், அந்த முன்விரோதத்தில் அலெக்சை தீர்த்து கட்டிவிட வேண்டும் என்று திட்டம் தீட்டியதும், அதன்படி தனது வீட்டுக்கு மது குடிக்க அழைத்து அதிக அளவு மதுகுடிக்க வைத்து வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.
கைது
மேலும் கொலையில் தூத்துக்குடி கக்கன்ஜி நகரை சேர்ந்த இசக்கிமணி (22) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.