உள்ளூர் செய்திகள் (District)

வேதாரண்யத்தில் இருந்து நாகைக்கு ஒன் டூ ஒன் பஸ் இயக்க வேண்டும்

Published On 2023-03-02 09:22 GMT   |   Update On 2023-03-02 09:22 GMT
  • வேதாரண்யத்தில் இருந்து மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்திற்கு அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.
  • பல ஆண்டுகளுக்கு முன்பு இடைநில்லா பஸ் இயக்கப்பட்டது.

வேதாரண்யம்:

தமிழ்நாடு அரசுக்கு, அகில பாரத மக்கள் மகாசபா நாகை மாவட்ட தலைவர் இளம் பாரதி அனுப்பி உள்ள மனுவல கூறியிருப்பதாவது:-

வேதாரண்யத்தில் இருந்து மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்திற்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.

அனைத்து பஸ்களும் வேதாரண்யத்தில் இருந்து 55 கி.மீ தூரம் உள்ள நாகைக்க்கு செல்ல 2 மணி நேரம் ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

மேலும் நாள்தோறும் நாகையில் உள்ள மருத்துவ கல்லூரி நீதித்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளில்வே தாரணியத்தில் இருந்து சென்று பணியாற்றுபவர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர்.

பொதுமக்கள் பயன்படும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இடைநில்லா பஸ் இயக்கப்பட்டது.

இடையில் எங்கும் நிற்காமல் 1.15 மணி நேரத்தில் சென்று விடும்.

ஆனால் சமீப காலமாக அந்த விரைவு பஸ்களும் நிறுத்தபட்டு விட்டன.

சாலைகள் மேம்படுத்தப்பட்ட இன்றைய நிலையில்த ற்போது வேதாரண்யத்தில் இருந்து நாகைக்கு 1 மணி நேரத்திலேயே செல்ல இயலும்.

எனவே வேதாரண்யத்தில் இருந்து நாகை அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள், கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக காலை 8 -9 மணிக்குள் இந்த ஒன் டூ ஒன் பஸ் 2 இயக்க வேண்டும்.மக்கள் நலன் கருதி இதனை உடனே இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News