உள்ளூர் செய்திகள் (District)

திருவானைக்காவலில் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கிய பிரியாணி கடைக்காரர் கைது

Published On 2024-09-22 09:12 GMT   |   Update On 2024-09-22 09:12 GMT
  • கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும் இடையூறு ஏற்பட்டது.
  • போலீசார் விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

திருச்சி:

திருவானைக்காவல் கொள்ளிடம் அழகிரிபுரம் செக் போஸ்ட் பகுதியில் ஒரு பிரியாணி கடை உள்ளது. இதை அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது30) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இவரது கடையில் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் வந்தது. வாகனத்தில் வந்தவர்கள் அதை விக்னேசின் கடை முன்பாக நிறுத்திவிட்டு மற்றொரு கடைக்கு சென்றனர். நேரம் ஆகியும் வேனை எடுக்கவில்லையாம். இதனால் விக்னேஷின் கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவது பாதித்தது.

மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் கடைக்காரர் விக்னேஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் குடிபோதையில் வந்த அவர் அங்கிருந்த காவல்துறை வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து வாகனத்தை அடித்து நொறுக்கிய விக்னேசை பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News