நெல்லை அருகே தண்டவாளத்தில் தலைவைத்து பெயிண்டர் தற்கொலை
- முருகன் இன்று காலை தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
- நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சென்ற ரெயிலில் முருகன் அடிபட்டு இறந்தது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பட்டன் கல்லூர் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் இன்று காலை பட்டன் கல்லூருக்கு சற்று தொலைவில் நெல்லை - செங்கோட்டை ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சந்திப்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யதாஸ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் இன்று காலை தாம்பரத்தில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.
மேலும் அவர் தற்கொலை செய்வதற்காக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்ததும், ரெயில் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு இறந்ததும் தெரிய வந்தது.
அவரது உடலை மீட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.