உள்ளூர் செய்திகள் (District)

சேரன்மகாதேவி அருகே அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

Published On 2023-05-02 09:24 GMT   |   Update On 2023-05-02 09:24 GMT
  • வீரவநல்லூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு மணிகண்டன் சென்றதாக கூறப்படுகிறது.
  • மணிகண்டன் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்கநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன் (வயது 22). பெயிண்டர். இவர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான சுரேஷ் (27) என்பவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு வீரவநல்லூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு சேரன்மகாதேவியை கடந்து மேல கூனியூர் மீன் பண்ணை பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்றார். அப்போது அங்கு பாலம் அமைக்கும் பணிக்காக ஒருவழியில் பாதை அடைக்கப்பட்டு மற்றொரு பாதை வழியாக இருபுறமும் செல்லும் வாகனங்கள் செல்கிற வகையில் சாலை திறக்கப்பட்டு இருந்ததை அவர் கவனிக்கவில்லை.

இதனால் அந்த இடத்தில் அவர் திடீரென பிரேக் போட்டதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News