உள்ளூர் செய்திகள்

மக்கள் நலப்பேரவையின் 20-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.

Published On 2024-08-12 04:08 GMT   |   Update On 2024-08-12 04:12 GMT
  • பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
  • மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் சுதாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-


மதுரையில் நடைபெற்ற மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவையின் 20 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினேன்.

மேலும் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினேன்.

இந்த விழாவில் பேரவை பொதுச் செயலாளர் ஜான் ஸ்டீபன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தாயுமானசாமி, பேராசிரியர் இளங்கோ, மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் சுதாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஆர். அழகு மீனா இ.ஆ. ப அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.


மாலை முரசு அதிபர் அமரர் பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில் அவரது திருவுருவ படத்திற்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்களுடன் சேர்ந்து மரியாதை செலுத்தினோம்.


முன்னர் சு. வெங்கடேசன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம்.

Tags:    

Similar News