உள்ளூர் செய்திகள் (District)

கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்ற காட்சி.

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

Published On 2023-09-28 09:23 GMT   |   Update On 2023-09-28 09:23 GMT
  • ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
  • மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில் அழைத்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அளித்து அதில் முறையான தீர்வு காணமுடியாத 74 மனுக்கள் மீது விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 63 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 11 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், லஷ்மண குமார், மனோஜ்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மனுதாரர்கள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News