உள்ளூர் செய்திகள்

செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்

Published On 2022-08-06 10:03 GMT   |   Update On 2022-08-06 10:03 GMT
  • செல்போன் கடை ஊழியர்கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
  • நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்

பெரம்பலூர்:

பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த கோபாலின் மகன் வினோத்(வயது 28). இவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், தனது நண்பர் கார்த்திக்குடன்(25) நிர்மலா நகரில் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், வினோத்தை கத்தியால் குத்தி கொலை செய்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 4 பேர் நேற்று மாலை பெரம்பலூர் போலீசில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News