உள்ளூர் செய்திகள்

டிரைவர் வீட்டில் 4 பவுன் நகை-லேப்டாப் திருட்டு

Published On 2023-05-06 07:39 GMT   |   Update On 2023-05-06 08:54 GMT
  • டிரைவர் வீட்டில் 4 பவுன் நகை-லேப்டாப் திருட்டு போனது
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகரம்சீகூர்:

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்துள்ள கீழ்க்குடிகாடு மேற்குத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன் டிரைவர். இவரது மனைவி சுசிலா(வயது 47). அறிவழகன் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். சுசிலா வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ஒரு மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுசிலா, இது குறித்து மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News