உள்ளூர் செய்திகள் (District)

மதுபானம் விற்ற முதியவர் கைது

Published On 2023-05-02 06:35 GMT   |   Update On 2023-05-02 06:35 GMT
  • மதுபானம் விற்ற முதியவர் கைது செய்யபட்டார்
  • அவர்களிமிருந்து சுமார் 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 228 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

அகரம்சீகூர்:

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள பென்னக்கோணம் பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மது விலக்கு சப் இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வி தலைமையில் போலிசார் பென்னக்கோணம் பகுதியில் ரோந்து பணியினை மேற்கொண்டனர். அப்போது பென்னக்கோணத்தில் வேலு மகன் பெரியசாமி (வயது 82) வீட்டில் சட்டவிரோதமாக அரசு மதுபானபாட்டில்கள் விற்பது தெரியவந்தது.

அங்கு மதுபாட்டில்களை வைத்து விற்றுக்கொண்டு இருந்த பெரியசாமியை மது விலக்கு போலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிமிருந்து சுமார் 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 228 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து சட்டவிரோதமாக விற்பனை செய்த பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News