உள்ளூர் செய்திகள் (District)

மகளிர் கல்லூரியில் பாவை விழா

Published On 2023-09-19 06:49 GMT   |   Update On 2023-09-19 06:49 GMT
  • ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் நடந்த பாவை விழாவில் நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டார்
  • வெற்றிப்பெற்ற மாணவிக்கு நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்

பெரம்பலூர்,

பெரம்பலூரில் ராமகிருஷ்ணா ஆன்மீக பண்பாட்டு மையத்தின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஸ்ரீ சாரதா மகளிர் கலைக் கல்லூரியில் நடந்தது.விழாவிற்கு ராமகிருஷ்ணா ஆன்மீக பண்பாட்டு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். கலெக்டர் கற்பகம், எஸ்பி ஷ்யாம்ளாதேவி, உமா பஸ் உரிமையாளர் ராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அருட்செல்வி என்கிற பட்டத்துடன் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரமும், சிறப்புப் பரிசு ரூ. ஒரு ஆயிரமும் என ரொக்க பரிசுத் தொகையை நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் வழங்கி பாராட்டினார். உமா பஸ் உரிமையாளர் ராமலிங்கம் அருள்செல்வன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.விழாவில் கல்லூரி முதல்வர்கள் சுபலெட்சுமி, மாரிமுத்து, பிரபாகரன், பள்ளி முதல்வர்கள் கலைச்செல்வி, கோமதி, சத்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News