உள்ளூர் செய்திகள் (District)

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-09-09 09:41 GMT   |   Update On 2023-09-09 09:41 GMT
  • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
  • நெஞ்சு வலி இருந்ததாக கூறப்படுகிறது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 43). விவசாயி. இவருக்கு நெஞ்சுவலி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோவிந்தன் விஷம் குடித்தார். இதையடுத்து கோவிந்தனை உறவினர்கள் மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கோவிந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News