உள்ளூர் செய்திகள் (District)
அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் உண்ணாரவிரதம்
- அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் உண்ணாரவிரதம் நடைபெற்றது
- பெண்கள் உட்பட 20க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் பொதுமக்கள் அடிப்படை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி அம்மாபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் சசிக்குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உட்பட 20க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தகவலறிந்த பெரம்பலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என உறுதியளித்தார். இதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர். இந்த போராட்டம் சுமார் 5மணிநேரம் நடந்தது. பின்னர் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர்.