உள்ளூர் செய்திகள் (District)
4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- பெரம்பலூர் நகரில் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நகராட்சி அறிவிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சிக்கு வரும் கொள்ளிடம் குடிநீர் திட்டத்திற்காக தாளக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நாளை (3ம்தேதி) முதல் 6ம்தேதி முடிய நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.