உள்ளூர் செய்திகள் (District)

குப்பை இல்லா நகரம் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-09-19 06:56 GMT   |   Update On 2023-09-19 06:56 GMT
  • பெரம்பலூர் நகராட்சி சார்பில் குப்பை இல்லா நகரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
  • நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்

பெரம்பலூர், 

பெரம்பலூர் நகராட்சி சார்பில் தூய்மை பாரத இயக்கம் 2.0 - வை முன்னிட்டு குப்பை இல்லாத நகரமாக்க வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆணையர் ராமர், துணை தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடத்தல் மற்றும் மனித கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலம் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி வழியாக பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.இதில் நகராட்சி கவுன்சிலர்கள் துரை காமராஜ், தங்க சண்முக சுந்தரம், சித்ரா, சவுமியா, ரஹ்மத்துல்லா, நல்லுசாமி மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு, வக்கீல் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News