உள்ளூர் செய்திகள் (District)

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-19 06:37 GMT   |   Update On 2023-09-19 06:37 GMT
  • ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வ லமாக வந்து ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம், 

பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. அச்சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததாக கூறி வருவாய்த் துறையினர் சிலையை அப்புறப்படு த்தினர்.இதில் அங்கு கூடியிருந்த பொது மக்களையும் இந்து முன்னணியினரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.மேலும் அங்கிருந்த இந்து முன்னணி திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா தலைமையில் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறி முன்னெச்சரிக்கையாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவி த்தும், கைது செய்யப்ப ட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும். கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு இந்து முன்னணி மாவட்ட துணை த்தலைவர் பழனிச்சாமி தலைமையில் இந்து முன்னணியினர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வ லமாக நான்கு ரோட்டிற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமபாலமு ருகன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பாண்டி யராஜன், பாக்கியராஜ், அருள், விஜய், வெற்றிச்செ ல்வன், தவமணி, ரமேஷ், ஐயம்பெருமாள், பி.எம்.ஆர் ரமேஷ், இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொ ண்டு கண்டனம் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News