உள்ளூர் செய்திகள் (District)

தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு அறிமுக கூட்டம்

Published On 2023-09-25 08:01 GMT   |   Update On 2023-09-25 08:01 GMT
  • பெரம்பலூரில் தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடந்தது
  • கூட்டத்தில் 55 தொண்டு நிறுவன பிரநிதிகள் கலந்து கொண்டனர்

பெரம்பலூர், 

பெரம்பலூரில் தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். துளிகள் அறக்கட்டளை நிறுவனர் சூர்யகுமார் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் அசோக்குமார் சிறப்புரையாற்றி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள் மற்றும் மாநில துணை தலைவர்கள் சசிக்குமார், இளங்கோவன் உட்பட பலர் பேசினர்.

புதிய நிர்வாகிகளாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஆசைத்தம்பி , மாவட்ட தலைவராக ராமலிங்கம், மாவட்ட செயலாளராக சிற்றம்பலம், பொருளாளராக சூர்யகுமார், துணை தலைவராக ஞானபிரகாஷ், துணை செயலாளராக சரஸ்வதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் 55 தொண்டு நிறுவன பிரநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சிற்றம்பலம் வரவேற்றார். முடிவில் ராமலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News