உள்ளூர் செய்திகள் (District)

மொபட்டில் இருந்து கீழே விழுந்தவர் பலி

Published On 2023-09-17 09:39 GMT   |   Update On 2023-09-17 09:39 GMT
  • மொபட்டில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்
  • விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பெரம்பலூர்,

பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை ஏ.வி.ஆர். நகர் அப்புசாமி 2-வது தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 53). இவருக்கு கல்யாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சசிக்குமார் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி கேண்டீன் ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 12-ந்தேதி இரவு நண்பர் மணிகண்டனை மொபட்டில் அழைத்து கொண்டு பெரம்பலூா் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் கல்யாண் நகர் அருகே உள்ள திருமண மண்டபம் எதிரே சென்றபோது அந்த வழியாக ஒருவர் சாலையின் குறுக்கே சென்றதால் சசிகுமார் மொபட்டில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக துறையூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகுமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News