உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூரில் முதியோர் தினவிழா கொண்டாட்டம்

Published On 2023-10-02 07:04 GMT   |   Update On 2023-10-02 07:04 GMT
  • முதியோர் இல்லத்தில் முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது
  • மூத்தோர் அனைவரும் பாட்டு பாடி, கதை சொல்லி, ஆட்டம் போட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

பெரம்பலூர்

முதியோர்தினத்தை யொட்டி பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சோமண்டாபுதூர் பிரிவு ரோடு அருகே உள்ளே முதுயுகம் முதியோர் இல்லத்தில் முதியோர் தினவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஓய்வு பெற்ற கல்வி அதிகாதி ஜெயராமன் தலைமை வகித்தார். மூத்தோர் அனைவரும் பாட்டு பாடி, கதை சொல்லி, ஆட்டம் போட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். நிகழ்வில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன், ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம் உட்பட முதியோர் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுயுகம் இல்ல பணியாளர்கள் செய்திருந்தனர். முன்னதாக மூத்தோர்கள் சார்பாக ராஜேஸ்வரி வரவேற்றார். அபிநந்தன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News