பத்திரம்- நகல் எழுதுவோர் சங்க செயற்குழு கூட்டம்
- பெரம்பலூரில் பத்திரம்- நகல் எழுதுவோர் சங்க மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடந்தது
- முதல்வர், பதிவுத்துறை அமைச்சர், பதிவுத்துறை செயலாளர், பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் பத்திரம்- நகல் எழுதுவோர் சங்க மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாநில தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் தங்கராசு, ராமராஜ், கண்ணன், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுசெயலாளர் கண்ணன், மாநில பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இதில் ஆவண எழுத்தர் நலநிதிக்குழுவிற்கு பத்திரம் -நகல் எழுவோர் சங்கத்தினை அங்கீகாரம் செய்தமைக்கும், சங்க நபர்களை நலநிதிய இயக்குநர்களாக தேர்வு செய்தமைக்கும் , நல நிதிய பயனாளிகளுக்கும் பலனளித்தமைக்கும் அரசுக்கும், முதல்வர், பதிவுத்துறை அமைச்சர், பதிவுத்துறை செயலாளர், பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடத்துவது, நலநிதியின் செயலாளர் பொறுப்பு மற்றும் நலநிதிய இயக்குநர்கள் கூடுதலாக 5 நபர்களை கோருதல், மாநில பொதுக்குழு கூட்டம் நடத்துதல் என்பது உட்படபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கமலக்கண்ணன் வரவேற்றார். முடிவில் அப்துல் அலிம் நன்றி கூறினார்.