உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூர் கோவில் உண்டியல் திருட்டு

Published On 2023-10-01 09:51 GMT   |   Update On 2023-10-01 09:51 GMT
  • பெரம்பலூர், அய்யலூர் கிராமத்தில் உள்ள பஞ்சமாயி அம்மன் கோவிலில் உண்டியல், வெண்கல மணிகள், கலசங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர்
  • மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே அய்யலூர் கிராமத்தில் ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான பஞ்சமாயி அம்மன் கோவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது .அப்போது பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர் இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்து உண்டியல் மற்றும் வெண்கல மணிகள் கலசங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.7000 இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News