உள்ளூர் செய்திகள் (District)

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நரிக்குறவர்கள் மனு

Published On 2022-11-05 09:39 GMT   |   Update On 2022-11-05 09:39 GMT
  • வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நரிக்குறவர்கள் மனு அளித்தனர்
  • அடிப்படை வசதிகள் ேகாரி

பெரம்பலூர்:

அகரம்சீகூர் அடுத்து குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சி நரி ஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலணியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் குடியிருப்பு வீடுகள் மற்றும் தெருக்கள் மழைநீர் மற்றும் கழிவு நீரால் சூழப்பட்டு சுகாதாரமற்று நிலை உள்ளது. மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இது குறித்து சிறுமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இடம் பலமுறை எடுத்து கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டி 50க்கும் மேற்பட்டோர் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆனால் அவர் இல்லாததால் வேறு அதிகாரிகளிடம் மனு அளித்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தனர். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை சிவா உடனிருந்தனார்.

Tags:    

Similar News