வெளிநாட்டில் இறந்த மகனின் உடலை கொண்டு வர கோரி கலெக்டரிடம் மனு
- மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
- வெளிநாட்டில் இறந்த மகனின் உடலை கொண்டு வர கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.அதன்படி பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 60). இவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில், எனது மகன் சங்கர் (38). 14 ஆண்டுகளாக அபுதாபி ஹைலேண்ட் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 19ம்தேதி சொந்த ஊருக்கு வருவதாக கூறினார். இந்நிலையில் கடந்த 20ம்தேதி சங்கர் இறந்துவிட்டதாக கம்பெனியிலிருந்து தகவல் வந்தது. எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. இறந்த எனது மகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறியுள்ளார்.வடக்கு மாதவி, ஏரிக்கரை பகுதி மக்கள் சார்பாக 8 வது வார்டு உறுப்பினர் சந்தோசம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தங்களுக்கு நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதே போல் பெரம்பலூர் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் சார்பில் வெண்ணிலா அளித்தள்ள கோரிக்கை மனுவில், சுமார் 50 ஆண்டுகளாக இந்த பகுதியில் நிரந்திர இடம் இல்லாமல் இருப்பதாகவும், அரசு மூலம் இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.