உள்ளூர் செய்திகள் (District)

குன்னம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

Published On 2022-08-23 09:41 GMT   |   Update On 2022-08-23 09:41 GMT
  • குன்னம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது

பெரம்பலூர்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவளாந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், ஓலைப்பாடி, எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்."

Tags:    

Similar News