உள்ளூர் செய்திகள் (District)
- கைகளத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- மின்சார வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கைகளத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமபரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான கைகளத்தூர், சிறுநிலா, நெற்குணம், நூத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.