உள்ளூர் செய்திகள் (District)

குரும்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-12-04 09:03 GMT   |   Update On 2022-12-04 09:03 GMT
  • குரும்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • பராமரிப்பு பணிகள் முடியும் வரை

பெரம்பலூர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கிராமியம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புது ஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்."

Tags:    

Similar News