உள்ளூர் செய்திகள் (District)
- மருவத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.
பெரம்பலூர்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான பேரளி, அசூர், சித்தளி, பில்வாடி ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை பெரம்பலூர் நகர்உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.