உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-09-13 08:19 GMT   |   Update On 2023-09-13 08:19 GMT
  • பெரம்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
  • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு

பெரம்பலூர்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குரோடு, அருமடல் பிரிவுசாலை, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், அருமடல், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சிட்கோ, இந்திராநகர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News