உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-09-14 08:26 GMT   |   Update On 2023-09-14 08:26 GMT
  • பெரம்பலூர் மாவட்டம் பேரளி, வாலிகண்டபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் என்று அறிவிப்பு

பெரம்பலூர்,

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது, என்று பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News