உள்ளூர் செய்திகள் (District)
பெரம்பலூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
- பெரம்பலூரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குபேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் மற்றும் கிராமிய பகுதிகளான எளம்பலூர், சிட்கோ, சமத்துவபுரம், இந்திரா நகர், போலீஸ் குடியிருப்பு, அருமடல், அருமடல் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்று பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.