உள்ளூர் செய்திகள்

அயிலூர் குடிக்காட்டில் மக்கள் தொடர்பு முகாம்

Published On 2023-06-03 06:27 GMT   |   Update On 2023-06-03 06:27 GMT
  • அயிலூர் குடிக்காட்டில் மக்கள் தொடர்பு முகாம் 14-ந்தேதி நடக்கிறது
  • பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்னதாகவே சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து பயனடையலாம்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், அயிலூர் குடிக்காடு கிராமத்தில் வருகிற 14-ந்தேதி கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. எனவே, அயிலூர் குடிக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்னதாகவே சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து பயனடையலாம், என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News