உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் உயிரிழந்த ரவுடி

Published On 2023-05-16 07:57 GMT   |   Update On 2023-05-16 07:57 GMT
  • அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி
  • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ரெஜி என்ற ரகுநாத் (வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு அம்மாபாளையத்தில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் லாடபுரம் பிரிவு சாலை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த ரகுநாத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரகுநாத் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ரகுநாத் ரவுடி என்றும், அவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News