உள்ளூர் செய்திகள் (District)

நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு முகாமில் 13 மனுக்களுக்கு தீர்வு

Published On 2023-09-17 09:44 GMT   |   Update On 2023-09-17 09:44 GMT
  • பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு முகாமில் 13 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
  • சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் வசிக்கும் பொதுமக்களின் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. முகாமில் ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன், பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நல்லம்மாள், ராமர் மற்றும் ஏட்டு பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நிலப்பிரச்சினை தொடர்பாக பெறப்பட்ட மொத்தம் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News