உள்ளூர் செய்திகள் (District)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2023-09-20 07:37 GMT   |   Update On 2023-09-20 07:37 GMT
  • கோனேரிபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்
  • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பெரம்பலூர்,

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்து கிடந்த நபர் டீசர்ட்டும், கைலியும் அணிந்திருந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவா் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News