உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-09-01 09:05 GMT   |   Update On 2022-09-01 09:05 GMT
  • கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்குமாதவி ஏரிக்கரை அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார்(வயது 25) என்ற வாலிபரை பிடித்து பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் போலீசார் அஜித்குமாரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 கிராம், 20 கிராம் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். கைதான அஜித்குமார் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News