உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி

Published On 2022-07-15 09:48 GMT   |   Update On 2022-07-15 09:48 GMT
  • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.
  • அவசியமாக போட்டு கொள்ள வேண்டும்

பெரம்பலூர்:

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு பயிலும் 8,335 மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான், ரண ஜென்னி, கக்குவான் இருமல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளிகளில் 5 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மொத்தம் 17,583 மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான், ரணஜென்னி ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை மேற்கண்ட மாணவ-மாணவிகள் தவிர்க்காமல் அவசியமாக போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News