உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூரில் ரத்த தான விழிப்புணர்வு பயணம்

Published On 2023-09-27 04:01 GMT   |   Update On 2023-09-27 04:01 GMT
  • தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
  • ராமேஸ்வரத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஆட்டோ பயணம்

பெரம்பலூர்,   

தமிழ்நாடு டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நலச்சங்க மாநில தலைவரும், சமூக ஆர்வலருமான சாகுல் ஹமீது என்பவர் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை ரத்ததானம் குறித்தான விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த ஆகஸ்ட் 21ம்தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஆட்டோ பயணம்

விழிப்புணர்வு பயணம் சிவகங்கை, மதுரை , திண்டுக்கல், கோவை , ஈரோடு, வேலூர், காஞ்சிபுரம் வழியாக செப்டம்பர் 21-ந்தேதி சென்னையை சென்றடைந்தது. பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக பெரம்பலூர் வந்தடைந்தது.

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் சார்பில் பெரம்பலூர் டிராபிக் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையில் எஸ்ஐ வரதராஜன் முன்னிலையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து இவரது ரத்த விழிப்புணர்வு ஆட்டோ பயணம் புது பஸ்ஸ்டாண்ட், பாலக்கரை, சங்கு பேட்டை, காமராஜர் வளைவு , ஆத்தூர் சாலை, பெரம்பலூர் காந்தி சிலை வரை மேற்கொள்ளப்பட்டன. அப்போது ரத்த தான அவசியம் குறித்து துண்டு பிரசுரம் மற்றும் துணி பை வழங்கப்பட்டது. பெரம்பலூரில் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளை கவுரவ செயலாளர் ஜெயராமன் வழி அனுப்பி வைத்தார்.

பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன், சபரி துரைராஜ், செங்குணம் குமார் அய்யாவு, பெரம்பலூர் ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News