உள்ளூர் செய்திகள் (District)

ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 5 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

Published On 2023-09-27 04:04 GMT   |   Update On 2023-09-27 04:04 GMT
  • பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில்பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
  • கட்டிடத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அகரம்சீகூர்,  

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பெரம்பலூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கட்டிடம், வ.கீரனூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் ஆகிய புதிய வகுப்பறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கற்பகம் கீழப்பெரம்பலூர் மற்றும் வ.கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் குத்துவிளக்கு ஏற்றி பள்ளிக் கட்டிடத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்லலிதா, ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார்,செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News