உள்ளூர் செய்திகள் (District)

கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைவாக கட்ட கோரிக்கை மனு

Published On 2023-11-02 10:04 GMT   |   Update On 2023-11-02 10:04 GMT
  • மழைகாலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • குடிநீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை கட்ட வேண்டும்.

திருத்துறைப்பூண்டி:

உதயமார்தாண்டபுரம் ஊராட்சியில் நேற்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாச்சிகுளம் கிளை செயலளார் அலாவுதீன் தலைமையிலான நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-

உதயமார்தாண்டபுரம் ஊராட்சிக்கு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அனுமதி கிடைத்து அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் விரைவாக எடுக்க வேண்டும்.

வரும் மழைகாலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஊராட்சியில் உள்ள அனைத்து இணைப்பு சாலைகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை கட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News